தங்க நகைகள் திருடிய இரு இளைஞர்கள் பிடிபட்டனர்


(எப்.முபாரக்)
2018-05-20.திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மூன்று பவுன் தங்க நகையை திருடிய இருவரை நேற்று(19) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை, லிங்க நகர் பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 27 வயதுடைய இருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சந்தேக நபர்கள் லிங்க நகர் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் புகுந்து மூன்று பவுன் தங்க நகைகளை திருடியுள்ளதாக சந்தேக நபர்களுக்கெதிராக நகை உரிமையாளர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.                         

சந்தேக நபர்கள் இருவரையும் தடுத்து வைத்துள்ளதோடு இன்று(20) திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.