மத்திய கிழக்கு நாடுகளுக்கு வெளிநாடு செல்லும் வீட்டுப் பணிப்பெண்களுக்கு ஆபத்து!


வெளிநாட்டுக்கு செல்லும் வீட்டுப்பணிப்பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாட்டு ஊசி ஏற்றப்படுவதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பெண்களுக்கே இந்த குடும்பக்கட்டுப்பாட்டு ஊசி ஏற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் இவ்விடயம் தொடர்பில் விசாரணையை முன்னெடுக்குமாறு அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் உண்மையென நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை முன்னெடுக்கப்டுமெனவும் ஹரீன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் வீட்டுப்பணிப்பெண்களில் அதிகமானோர் வறுமை கோட்டில் உள்ளவர்கள் என்பதோடு இவர்கள் அங்குச்சென்றும் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.