அஞ்சல் பணியாளர்களின் போராட்டத்திற்கு 18 தொழிற்சங்கங்கள் ஆதரவு


தமது போராட்டத்திற்கு 18 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

அதன் இணைப்பாளர் சிந்தக்க பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி சுகாதார, டெலிகொம், வங்கி மற்றும் தொடரூந்து தொழிற்சங்கங்களின் ஆதரவு தமக்கு கிடைக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் குறித்த தொழிற்சங்கங்களின் தலைவர்களுடன் நேற்றைய தினம் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், அதன்போதே அவர்கள் தமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளதாக சிந்தக்க பண்டார குறிப்பிட்டுள்ளார்.