விபத்தில் 4 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அவுஸ்திரேலியா நாட்டு பிரஜைகள் இருவர் பலி !


தெற்கு அதிவேக வீதியில் ஏற்பட்ட விபத்துக் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 65 கிலோமீற்றர் மைல் கல்லுக்கு அருகிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் அவுஸ்திரேலிய நாட்டு, ஒரே கும்பத்தைச்  சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவரும் 4 வயதுடைய குழந்தை ஒன்றுமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.