14 மற்றும் 16 வயதான சிறுவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் வெவ்வேறு தினங்களில் வனப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக வாகரை காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சிறுமி உறவினர்களுக்கு அறிவித்ததை தொடர்ந்து காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் சந்தேககத்தின் பேரில் குறித்த இரண்டு சிறுவர்களும் நேற்று முன்தினம்(28) காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய(29) தினம் அவர்கள் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி, மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.