வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருசாபிஷேக, சங்காபிஷேகம்

(சா.நடனசபேசன்)
சீர்பாததேவி என்னும் மாதரசியினால் உருவாக்கப்பட்ட வரலாற்றுக் சிறப்பு மிக்கதான அருள்மிகு மட்டு / அம்பாறை - வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருசாபிஷேக, சங்காபிஷேகம்  05.06.2018 செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.
அன்றைய தினத்தில் அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரை விநாயகப் பெருமானுக்கு 1008 சங்காபிஷேகமும், அலங்கார பூஜை, மகேஸ்வர பூஜை, சுவாமி திருவீதி உலா மற்றும் அன்னதானம் இடம்பெறவுள்ளதுடன் உற்சவம் இனிதே நிறைவுபெறும்.