சரஸ்வதி வித்தியாலயத்தில் மாதிரி சந்தை


(துறையூர் தாஸன்)

திருக்கோயில் வலயக்கல்விப்பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் மாதிரி சந்தை, பாடசாலை அதிபர் த.யோகேஸ்வரன் தலைமையில் இன்று  (18) இடம்பெற்றது.

இந்நிகழ்வில், வலயக்கல்வி அலுவலக உதவிப் பணிப்பாளர் வீ.குணாலன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ். தர்மபாலன் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள்  ஆகியோர் இதன்போது கலந்து கொண்டனர்.