மொக்கா மேல் பிரிவு தோட்டத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பரிவனால் வளர்த்து வந்த பசுவே இக்கன்றை இன்று மாலை ஈன்றுள்ளது.
எட்டுக் கால்கள், இரண்டு தலைகள் மற்றும் இரண்டு வால்களுடன் பிறந்த இக் கன்று குட்டி ஒரு சில மணித்தியாலங்களின் பின்னர் இறந்ததாக உரிமையாளர் தெரிவித்தார்.
ஒரே கருமுட்டையில் இரண்டு குட்டிகளாக பிரிகையடைந்து வளர்ந்த கன்றுக்குட்டிகள் ஒட்டி வளர்ந்தமையினால் ஏற்பட்ட விளைவே இது என மாட்டு வைத்தியர் ஒருவர் குறிப்பிட்டார்.