மட்டு- களுவாஞ்சிகுடி ஸ்ரீ யோக ஞான பீடத்தில் இடம்பெற்ற ஸ்ரீ தன்வந்திரி மகா யாகம்



-த.அழகானந்தம்-

மட்டு- களுவாஞ்சிகுடி பழந்தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ யோக ஞான பீடத்தில் காயத்திரி சித்தர் ஆர்.கே முருகேசு சுவாமிகளின் ஆன்மீக வாரிசு மற்றும் நேரடிச் சீடர் திரு எஸ்.புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் எதிர்வரும் காலங்களில் உலக மக்களைத் தாக்கவிருக்கும் கொடிய நோய்கள் மற்றும் பஞ்சம், பசி,பட்டினி போன்ற அல்லல்களில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக ஸ்ரீ தன்வந்திரி மகா யாகத்தினை கடந்த ஞாயிற்றுக் கிழமை (03/06/2018)அன்று மிகவும் பக்திப்பூர்வமாக நூற்றுக் கணக்கான பக்தர்கள் குழுமியிருக்க பகவான் காயத்திரி சித்தர் ஆர்.கே.முருகேசு சுவாமிகளின் தெய்வீக திருப் பாதங்களுக்கு பாத பூசை செய்யப் பட்டு பின்னர் திரு விளக்கு பூஜையுடன் இந்தியாவில் இருந்து தருவிக்கப் பட்ட 108 மூலிகைகள் மற்றும் சஞ்ஜீவினி மூலிகை என பல வகையான உயிர் மூலிகைகள் ஆகுதியாக இடப்பட்டு காயத்திரி மகா மந்திரம் மகா தன்வந்திரி மகா மந்திரம் மகா மிருத்தியுஞ்ஜெய மந்திரம் மேலும் சக்தி வாய்ந்த மூல மந்திரங்கள் ஜெபிக்கப்பட்டும் பக்தர்கள் மெய்மறந்து மேனி சிலிர்த்து அந்த தன்வந்திரி பகவானின் அருளினை நேரடியாக உணர்ந்தனையும் காண முடிந்தது யாகத்தினைத் தொடர்ந்து சுவாமிகளின் ஆசீர்வாதமும் அருளுபதேசமும் அன்னதானமும் இடம் பெற்றது.