மக்கள் மத்தியில் பெரும் பதட்டம் ! பெண் ஒருவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை !!


யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் பெண்ணொருவர் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற இச்சம்பத்தினால் குறித்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மானிப்பாய் பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்த கொள்ளை கும்பல், அவ்வீட்டிலிருந்த பெண்ணை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து, அங்கிருந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 70 வயதுடைய கந்தையா நீலாப்பிள்ளைதேவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.