கோட்டைக் கல்லாற்றில் சர்வதேச சுற்றாடல் தின நிகழ்வு


(இ.சுதாகரன்)
சர்வதேச சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சுற்றாடல் கோட்டைக் கல்லாறு சிறுவர் பூங்கா மைதானத்தில் பிரதேச செயலாளர் திருமதி வில்வரெத்தினம் சிவப்பிரியா தலைமையில் வியாழக்கிழமை  இன்று நடைபெற்றது.

முறையற்ற பிளாஸ்ரிக் பாவனையின் ஊடாக ஏற்படும் சூழல் மாசடைதலை தவிர்ப்போம் அதற்காக அனைவரும் ஒன்றிணைவோம் எனும் தொனிப் பொருளில் நடைபெற்ற சுற்றாடல் தின நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எஸ்.சீவரெத்தினம். மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி பி.சத்தியகௌரி, பிரதேச செயலக கணக்காளர் கார்த்திகேசு நிருவாக உத்தியோகத்தர் எஸ்.தவேந்திரன்,

களுதாவளை பிரதேச சபையின் நிதி முகாமைத்துவத்துக்கும் பொறுப்பான உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், கோட்டைக் கல்லாறு ஆலயங்களின் தர்மகாத்தாக்கள் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது பாடசாலை மாணவர்களுக்கான ஓவியம் வரைதல் போட்டி, கலைஞர்களுக்கான ஓவியம் வரைதல் போட்டி, விவாதப் போட்டி கண்காட்சி நிகழ்வுகள் நடைபெற்றதுடன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.