வடக்கு கிழக்கில் உதைபந்தாட்டத்தை பிரபல்யப்படுத்த வேலைத்திட்டம்


வடக்கு கிழக்கு மாகாணங்களில் உதைபந்தாட்ட விளையாட்டை பிரபல்யப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிறீமியர் லீக் உதைபந்தாட்டப்போட்டி நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
போட்டித்தொடர் நேற்று ஆரம்பமானது. இதில் 9 அணிகள் கலந்துகொள்ளவுள்ளன. இலங்கை உதைபந்தாட்ட சம்மேளத்தின்தின் நடுவர்கள் சபையுடன் சம்மேளனத்தின் கண்காணிப்பின் கீழ் போட்டி நடைபெறுவதாக இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளத்தின் தலைவர் அனுர டி சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.