கட்டாரில் இருந்து தங்கம் கடத்திய கல்முனையைச் சேர்ந்த நபர் விமான நிலையத்தில் கைது!


கட்டாரில் இருந்து இந்நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 5 தங்கப்பாளங்களுடன் நபரொருவர் விமான நிலைய சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரின் பயணப்பொதியில் குறித்த தங்கப்பாளங்கள் மறைத்து வைத்து கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் , இவற்றின் பெறுமதி சுமார் 17 இலட்சத்து 49 ஆயிரம் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

கல்முனை பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட தங்கப்பாளங்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதோடு , சந்தேகநபருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.