இலஞ்சம் பெற்ற அதிகாரி ஒருவர் பிடிபட்டார் !


பத்தாயிரம் ரூபாய் கையூட்டல் பெற்ற ஊழியர் நல காரியாலய அதிகாரியொருவர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

வியாபார நிலையம் ஒன்றின் உரிமையாளரால் பணியாளர் ஒருவருக்கு ஊழியர் சேமலாப நிதி வழங்கப்படாமை தொடர்பில் நடவடிக்கை எடுக்காதிருக்க குறித்த அதிகாரி கையூட்டல் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட குறித்த அதிகாரியை விசாரணைக்கு உட்படுத்தியதன் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கையூட்டல் ஆணைக்குழுவின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.