இலங்கை இளம்பெண்களின் கீழ்த்தரமான செயல்..! காணொளி வௌியானதால் பரபரப்பு !


குவைத் நாட்டிற்கு இலங்கையில் இருந்து பணிப்பெண்ணாக சென்ற சில பெண்கள் குடித்துவிட்டு மதுபோதையில் அரைநிர்வாணத்தில் தள்ளாடும் காணொளியொன்று வௌியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் தற்போது தீயாக பரவிவரும் இந்த காணொளியில் இரண்டு பெண்கள் போதையின் உச்சத்தில் இருப்பது தெரிகிறது.

குறித்த இரு பெண்களையும் மற்றொரு பெண் குளியலறைக்கு அழைத்துச் சென்று நீராடச்செய்வது போன்றும் குறித்த காணொளியில் பதிவாகியுள்ளது.

பின்னர் , போதையின் உச்சத்தில் இருக்கும் குறித்த இரண்டு பெண்களும் குளியலறையின் தரையில் உருண்டு , பிரண்டு ரகளை செய்கின்றனர்.

எனினும் , இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வௌியிடப்பட்டமை தொடர்பில் சிலர் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

அவர்கள் எவ்வளவு போதையில் இருந்தாலும் இவ்வாறு காணொளி பதிவு செய்து வௌியிடுவது சரியில்லை என தெரிவித்துள்ளனர்.

அதேபோல் , சிலர் குறித்த பெண்களுக்கு ஆதரவாகவும் , பலர் எதிராகவும் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குடும்ப வறுமைக்காக இளம் பெண்கள் வௌிநாடுகளுக்கு பணிப்பெண்ணாக அனுப்பப்படும் நிலையில் , இந்த பெண்களின் இவ்வாறான நடத்தை வௌிநாடுகளுக்கு இளம்பெண்களை அனுப்பும் பெற்றோருக்கு ஒரு பாடமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

(பெண்களின் எதிர்காலம் கருதி காணொளியை பதிவேற்றவில்லை)