அடையாளப்படுத்தல் தொடர்பாக O/L மற்றும் A/L மாணவர்களுக்கான முக்கியச் செய்தி


இந்த வருடம் சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றும் பரீட்சாத்திகள், தேசிய அடையாள அட்டையை விரைவில் பெற்று கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக இதனை தெரிவித்துள்ளார்.

40 சதவீதமாக விண்ணப்பங்கள் இன்னும் அனுப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகளுக்கு அமைய சில விண்ணப்பங்கள் உரிய முறையில் பூர்த்தி செய்து முன்வைக்கப்படாமை காரணமாக பல குறைப்பாடுகள் அவற்றுள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.