குளத்தை கடக்க முற்பட்ட வேளையில் நீரில் மூழ்கி 17 வயது சிறுவன் பலி

செ.துஜியந்தன்
பொத்துவில் பசரிச்சேனையைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் இன்று மதியம் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பொத்துவில் உடகோவை பகுதிக்கு சமையலுக்காக விறகு எடுக்க சென்ற 17 வயதுடைய கலந்தர் அப்துல் அப்ரின் என்பர் அங்குள்ள குளத்தை கடந்து செல்ல முற்பட்ட போதே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என முதல் கட்ட விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

அங்குள்ள பிரதேசவாதிகளின் தேடுதல் முயற்சியினாலயே குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதென பெற்றோர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.