பாடசாலையில் நடந்த சம்பவம் ! பரீட்சை எழுதிக்கொண்டிருந்த மாணவர்கள் உட்பட 43 பேர் வைத்தியசாலையில் !!


முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் மாணவர்கள் உட்பட 43 பேர் தேனீக்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் (தேசிய பாடசாலை ) இன்று (20) காலை பாடசாலையில் மாணவர்கள் பரீட்சையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் பாடசாலை வளாகத்தில் உள்ள தேனீக்கள் கூட்டில் இருந்து கலைந்து மாணவர்களை தாக்கியதில் 43 பேர் காயமடைந்துள்ளனர்.

மாணவர்கள் உடனடியாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இங்கு அனுமதிக்கப்பட்ட 43 பேரில் 32 பேர் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளதாகவும், குளவி தாக்குதலுக்கு உள்ளான 9 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் குளவி அச்சம் காரணமாக ஓடியவேளை விழுந்து காயமுற்ற மாணவர் ஒருவருமாக 11 பேர் சிகிச்சை பெறுவதாக அறியமுடிகிறது

குறித்த பாடசாலை வளாகத்தில் பாரிய 15 குளவி கூடுகள் இருப்பதோடு இவை உடனடியாக அகற்றப்பட வேண்டியவை என குறிப்பிடப்பட்டுள்ளது.