அடித்துக் கொல்லப்பட்ட சிறுத்தை மனிதர்களால் வளர்க்கப்பட்டது ! வெளியான புதிய தகவல் !


கிளிநொச்சி–அம்பாள்குளத்தில் கொலை செய்யப்பட்ட சிறுத்தையானது, கூடு ஒன்றில் வளர்க்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆங்கில வாரபத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 21ம் திகதி 10 பேரை தாக்கி காயப்படுத்தியதை அடுத்து, பொதுமக்கள் குறித்த சிறுத்தையை அடித்து கொலை செய்தனர்.

இதனை அடுத்து காணொளி ஆதாரங்களை வைத்து 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இறந்த சிறுத்தையின் உடற்கூற்று பரிசோதனைகளில், அந்த புலி கூடு ஒன்றில் அடைத்து வைத்து வளர்க்கப்பட்டமைக்கான சான்றுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சிறுத்தை இரண்டு தினங்களுக்கு எதனையும் உட்கொண்டிருக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது