சிறுமி றெஜினா படுகொலை சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு


றெஜினா படுகொலை / சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பிரதேசத்தில் 6 வயது மாணவியொருவரை கழுத்து நெரித்து கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று யாழ்ப்பாணம் - மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது , சந்தேகநபர்களை எதிர்வரும் 26ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த மாதம் 26ம் திகதி யாழ்ப்பாணம் - சுழிபுரம் பிரதேசத்தை சேர்ந்த சிவநேஸ்வரன் றெஜினா (வயது 6 ) சிறுமி கிணறொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமியின் உறவினரான 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உள்ளிட்ட மூவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.