கதிர்காமத்தில் உள்ளாடையில் மறைத்து விற்பனை செய்து வந்த பொருள் !! இருவர் கைது !


தமது உள்ளாடையில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்கள் கதிர்காமத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்காலை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் இன்று முற்பகல் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

34 மற்றும் 36 வயதுடைய சந்தேகநபர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

குறித்த சந்தேகநபர்கள் கதிர்காமம் யாத்திரைக்காக வருகை தரும் இளைஞர்களுக்கு நீண்ட காலமாக இவ்வாறு கஞ்சா விற்று வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கதிர்காமம் காவற்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.