இருதயபுரம் புனித வின்சன் டி பவுல் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா நடைபெற்றது.


க.விஜயரெத்தினம்


மட்டக்களப்பு இருதயபுரம் புனித வின்சன் டி பவுல் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா பாடசாலை நிருவாகப் பொறுப்பாளரும்,பங்குத்தந்தையுமான  அருட்பணி பேதுரு ஜீவராஜ் தலைமையில் சனிக்கிழமை(14.7.2018) பிற்பகல் 4.00 மணியளவில் திரு.இருதயநாதர் ஆலய முன்றலில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பாலர் பாடசாலை கல்விப்பணியத்தின் செயலாற்றுப் பணிப்பாளர் சங்கரப்பிள்ளை-சசிகரன் அவர்களும்,சிறப்பு அதிதிகளாக சவுக்கடி பங்குத்தந்தை அருட்பணி ஜீ.அம்புறோஸ்,மட்டக்களப்பு பாலர் பாடசாலை கல்விப்பணியகத்தின் வெளிக்கள உத்தியோகஸ்தர் திருமதி. சோபனா மலர்செல்வன் மற்றும் பங்குத்தந்தை உறுப்பினர்கள்,பாலர் பாடசாலை ஆசிரியைகளான செல்வி.கார்மேல் ராஜு,செல்வி.ஜஸ்ரினா ஜெயந்தினி அந்தோனிராசா,திருமதி.சாந்தி மரியசெல்வம்,திருமதி.குலட்டில்டா ஸ்பெக்,திருமதி.மேரி ஜெசில்டா யோகேந்திரன்,திருமதி.சாந்தினி வசந்தகுமார்,திருமதி.நிரஞ்சனி சுபாகரன்,மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள்.
இதன்போது அதிதிகளை சிறார்கள் மாலை அணிவித்தும்,மலர்கொத்து வழங்கியும், சிறார்களின் பேண்ட் வாத்தியங்கள் இசைக்க மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.ஒலிம்பிக் தீபம்,பாடசாலைக்கொடியெற்றப்பட்டும் வரவேற்புரை, தலைமையுரை,பிரதம அதிதியுரை,சிறார்களின் விளையாட்டுக்களும் இடம்பெற்றது.