மட்டக்களப்பில் ஆட்பதிவு அலுவலகம் ; சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை


க. பொ.த. சா தரப் பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை இம்முறை நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை அடுத்த மாதம் இறுதிக்கு முன்னர் விநியோகிக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக ஆட்பதிவுத் திணைக்களம் மற்றும் திணைக்களத்தின் செயற்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இலுப்பிட்டிய தகவல் தருகையில் முன்னெடுக்கப்பட்ட துரிதமான வேலைத்திட்டத்தினால் அடையாள அட்டைகளை வழங்கும் செயற்பாடு செயற்றிறன் மிக்கதாக இடம்பெற்றதே இதற்குக்காரணம் என்றார்.

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து ஐயாயிரத்து 12 ஆகும். தற்போது இந்த மாணவர்களுக்கு அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

வவுனியா, மட்டக்களப்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களில் மூன்று பிரதேச அலுவலகங்கள் ஸ்தாபிக்கப்படும் என்றும் ஆட்பதிவுத் திணைக்களம் மற்றும் திணைக்களத்தின் செயற்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இலுப்பிட்டிய மேலும் தெரிவித்தார்.