இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்று இரவு குருமன்காட்டுச்சந்தியிலுள்ள தொடர் மூன்று வர்த்தக நிலையங்கள், பலசரக்கு வியாபார நிலையம், அழகுசாதன பொருட்கள் விற்பனை நிலையம், தொலைத் தொடர்பு நிலையம் மூன்று வர்த்தக நிலையங்களுக்கும் கூரையைப்பிரித்து உள் நுழைந்த திருடர்கள் வர்த்தக நிலையத்திலிருந்த பணத்தினை எடுத்துச் சென்றுவிட்டதாகவும்வர்த்தக நிலைய உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.
இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் விசாரணைகளுக்காக குறித்த மூன்று வர்த்தக நிலைய உரிமையாளர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.