அம்பாறை பொத்துவில் கனகர் கிராமத்து மக்களின் நில மீட்புப் போராட்டத்தின் 3 ஆம் நாள் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள்

அம்பாறை பொத்துவில் கனகர் கிராமத்து மக்களின் நில மீட்புப் போராட்டத்தின் 3 ஆம் நாள் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் இரவு பகலாக போராட்ட களத்தில் 


பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட பொத்துவில் கனகர் கிராமத்து மக்களின் நில மீட்புப் போராட்டத்தின் மூன்றாம் நாளான இன்று நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இரவு பகல் பாராமல் போராட்டத்தில் கலந்து கொள்கின்றதாக ஏற்பாட்டக்குழுவின் செயலாளர்  எம். குழந்தைவேல் கருத்தும் தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்தும்  தெரிவிக்கையில் 

இன்று நாம் எமது நில மீட்புப் போராட்டத்தை ஆரம்பித்து  மூன்று நாட்கள் கடந்துவிட்டன ஆனால் எமது பிரச்சனைகள் தொடர்பாக எந்த அரச அதிகாரிகலோ அரசியல்வாதிகலோ இவ்விடத்திற்கு வரவில்லை எமது பிரச்சனைக்கு தீர்வும் கிடைக்கவில்லை ஆனால் எமது போராட்டத்தை நாம் கைவிடப்போவதில்லை.

நாங்கள் பல அசௌகரியங்களுக்கு மத்தியில் இவ்விடத்தில் எமது உரிமைகளை கெட்டு நிற்கின்றோம் ஆனால் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் எமது போராட்டத்தை தீர்வு கிடைக்கும்வரை நாம் நிறுத்தம் போவதில்லை என இவ்விடத்தில் கூறிக்கொள்ளவிருப்புகின்றேன் என போராட்ட ஏற்பாட்டக்குழுவின் செயலாளர்  எம். குழந்தைவேல் கருத்தும் தெரிவித்திருந்தமை குறிப்படத்தக்கது.