முன்னாள் போராளியின் தொழிலினைத் தொடர்வதற்கான உதவி

(ஷமி.மண்டூர்)
பெரியகல்லாற்றில் சிறிய அளவிலான வெதுப்பகத்தினை நடாத்திவந்த முன்னாள் போராளி ஒருவர் தன்னுடைய தொழிலினை தொடர்ந்து நடாத்துவதற்கான வளம் அற்றநிலையில் கஸரப்படுவதனை கிழக்கின் இளைஞர் முன்னணியின் தலைவரும், தேசிய நல்லிணக்கம், ஒருமைப்பாடு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இணைப்பாளர் கணேசமூர்த்தி கோபிநாத் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்ததனை அடுத்து , அவ் முன்னாள் போரளி கேட்டுக்கொண்டதற்கு அமைவாக தொடர்ந்து தொளிலினை தொடர்வதற்காக இரண்டு 50கிலோ மூடைகள் மாவினை க.கோபிநாத் அவர்கள் கடந்த வாரம் வழங்கிவைத்திருந்தார்.
தற்போது அவ் வெதுப்பகத்தினை அவ் முன்னாள் போராளி தொடர்ந்து நடத்திச்சென்று கொண்டிருப்பது முக்கியமான விடயமாகும்.