அனைத்து மாவட்டங்களிலும் நிலவும் தமிழ்மொழி மூலமான ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தீர்வுகாண நடவடிக்கை


நாட்டின் பல மாவட்டங்களிலும் நிலவும் தமிழ்மொழி மூல ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு தீர்வு காண்பது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழி, விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு நிலவும் ஆசிரியர் வெற்றிடத்திற்கு தீர்வுகாணும் நோக்கில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் சேவைகளை பெற்றுக் கொள்வது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி தேசிய மட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் உயர்தர பௌதீக விஞ்ஞானம், கணிதம் ஆகிய பிரிவுகள் ஒரு பாடசாலையில் மாத்திரமே இயங்குவதாக மாவட்ட செயலாளர் மஹிந்த வீரசூரிய தெரிவித்தார்.

கணித, விஞ்ஞான பாடங்களுக்கு நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் இதற்கான காரணமாகும். பாடசாலைகளிலிருந்து வெளியேறும் மாணவர்களுக்கு தொழில்பயிற்சியை வழங்குவது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.