வின்சன்ட் VS சிசிலியா பாடுமீன் சமர் கிரிக்கட் போட்டிக்கான ஆரம்ப நிகழ்வு



(வரதன்) கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற சமர்களில் ஒன்றான பாடுமீன் சமர் கிரிக்கட் போட்டியை முன்னிட்டு இன்று மட்டக்களப்பு நகரில் மாபொரும் நிகழ்வு ஒன்று மட்டு வலயகல்வி வலயத்தினால் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இப்போட்டியானது கடந்த காலங்களில் நகரின்   வசதி குறைந்த மைதானங்களில் தான் இடம்பெற்று வந்தது. தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின் கிழ் கடந்த 25 வருடங்களின் பின்பு வெபர் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. பாடுமீன் சமர் கிரிக்கட் போட்டிக்கான ஆரம்ப நிகழ்வு காலை மட்டக்களப்பு நகரில் விமர்சியாக இடம் பெற்றது.

வரும் 22.09.2018 அன்று இடம்பெறவுள்ள இப் பாடுமீன் சமர் கிரிக்கட் போட்டியில் கலந்து கொள்ளும் மட்டக்களப்பு வின்செனட் மற்றும் சிசீலியா பெண்கள் பாடசாலையின் இருஅணி வீராங்கனைகளும் பாண்டு வாத்திய அனியினரால் பாடசாலைகளிலிருந்து நிகழ்வு இடம்பெற்ற இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பின்பு இரு அணி வீரர்களும் வாகனத்தில் வெற்றிகிணத்துடன் நகரின் பிரதான விதிகளுடாக ஊர்வலமாக சென்று மீண்டும் தங்கள் பாடசாலையை வந்தடைந்தனர். இன்றைய இவ் நிகழ்விற்கு மட்டு வலய உடற்கல்வி உதவிப் பணிப்பாளர் எ.லவக்குமார் மற்றும் கல்வித்திணைக்கள உயர் அதிகாரிகள் இவ்விரு பாடசாலையின் அதிபர்கள் ஆசிரியர்கள் பாடசாலையின் (பழைய) மாணவர்கள் எனபலரும் கலந்து கொண்டனர்.