(அஸ்லம் எஸ்.மௌலானா)
திருக்கோவில் பிரதேச சபை ஆலோசனைக் குழுவின் அறிமுகக் கூட்டம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் அதன் தவிசாளர் ஆர்.டபிள்யூ.கமலராஜன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம், ஆளுகை புத்தாக்க நிறுவகத்தின் ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் ஆகியோர் கலந்து கொண்டு, உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளில் ஆலோசனைக் குழுவின் வகிபாகம் பற்றி விளக்கவுரை நிகழ்த்தினர்.