ஆரையம்பதி கடற்கரை நரசிம்மர் ஆலயம் விசமிகளால் உடைப்பு !!!


ஆரையம்பதி கடற்கரை நரசிம்மர் ஆலயத்தின் கதவுகள் சிலை என்பன 19.09.2018 புதன் கிழமை இரவு விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. குறித்த ஆலயமானது ஆரையம்பதி கடற்கரை பிரதேசத்தில் பொதுமக்கள் குடியிருப்புக்கள் அற்ற பகுதியில் அமைதுள்ளது. சகோதர இனத்தவரும் இணைந்து வாழும் குறித்த பிரதேசத்தில் இச் சம்பவம் பெரும் பதட்ட நிலையை உருவாக்கி உள்ளது.

கடந்த பத்துவருடங்களுக்கு முன்னர் அதாவது 2008 ஜனவரி மாதம் குறித்த ஆலயத்தின் சிலைகள் சேதமாக்கப்பட்டதுடன் ஆலய கருவறையில் மாட்டுத்தலை வெட்டி வீசப்பட்டதும் அதனைத்தொடர்ந்து இன முறுகல் நிலைக்கு இப்பிரதேசம் தள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.