யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு



திருகோணமலை - புல்மோட்டை பிரதான வீதியில் கல்லறாவ பகுதியில் யானைத் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த 54 வயதான ஒருவர் என்றும், அவர் கல்லறாவ பகுதியில் சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குச்சவெளி காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.