துறைநீலாவணை சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் 7 மாணவர்கள் சித்தியடைந்து சாதனை


(சா.நடனசபேசன்)

வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட துறைநீலாவணை சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் 7 மாணவர்கள் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளதாக அதிபர் ஏ.மனோகரன் தெரிவித்தார்.
இதில் தூ.லிலக்ஷாந் 184, ர.பிருத்வி  184, கோ.டிக்ஷிகா 178 லி.அஸ்விகன் 175,சு.கிருஸ்டிக்கா 172, ந.சதுமிதன் 164, தே.டேனுச்சிக்கா 164 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர் அதேவேளை இம் மாணவர்களை வழிப்படுத்திய அதிபர் ஏ.மனோகரன் மற்றும் கற்பித்த ஆசிரியர் பூ.இதயகுமார் ஆகியோருக்கு பெற்றோர்களும் பொது அமைப்புக்களும் நன்றிகளும் பாராட்டுக்களும் தெரிவித்துள்ளனர்