பாரம்பரிய தமிழ் கலாசார முறையில் மட்டக்களப்பு பாடும் மீன் அரிமாக் கழகத்தின் புதிய தலைவருக்கான பதவியேற்பு


(சிவம்)

பாரம்பரிய தமிழ் கலாசார முறையில் முதல் முறையாக மட்டக்களப்பு பாடும் மீன் அரிமாக் கழகத்தின் 13 ஆவது தலைவருக்கான பதவியேற்பு நிகழ்வு மட்டக்களப்பு பயனியர் விதியில் அமைந்துள்ள கபே சில்லில் நடைபெற்றது.

சர்வதேச அரிமாக் கழகங்கள் வலயம் 1 வலயம் 2 மாவட்டம் 306 சி 2 உறுப்பினர்களின் மத்தியில் நடப்பு வருடத்திற்கான புதிய தலைவராக லயன் கஜேந்திரக்குமார் தெரிவு செய்யப்பட்டார் இவருக்கான பதவியேற்பு நிகழ்வில் ஆழுனர் சபையின் செயலாளர் லயன் ஸ்மத் கமீட் தலைவருக்காக பதவி முத்திரைகளை வழங்கியதோடு சத்தியப்பிரமாண நிகழ்வையும் நடாத்தி வைத்தார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், கிழக்கு மாகாண பிரதி ஆழுனர் சபை செயலாளர் கலாநிதி லயன் ஏ.செல்வேந்திரன், பிராந்திய தலைவர் லயன் பி.சடாச்சரராஜா, வலயம் 1 தலைவர் கலாநிதி லயன் கே.செல்வராஜா, வலயம் 2 தலைவி லயன் லேடி பாரதி கென்னடி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.