உறுகாமப் பிரிவு நீர்ப்பாசன திணைக்களத்தில் வாணி விழா நிகழ்வு பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் எந்திரி எஸ்.ஜெயன் பார்த்தசாரதி தலைமையில் இன்று 18.10.2018 நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதியாக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கே.ஞானரெத்தினம் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றியதுடன் செங்கலடிமத்திய கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்வுகளும் வெகு விமர்சையாக இடம் பெற்றது .இந் நிகழ்வில் நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.