ஸ்ரீ விஸ்வகர்ம ஜயந்தியை முன்னிட்டு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்குக் கௌரவம்

ஸ்ரீ விஸ்வகர்ம ஜயந்தியை முன்னிட்டு அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற மற்றும் பட்டியலில் தெரிவான உறுப்பினாகளுக்கான கௌரவம் மட்டக்களப்பு  மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட விஸ்வகர்ம சம்மேளனம் நடாத்திய இந்நிகழ்வில் அதன் தலைவரும் மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினருமான சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, சுயேட்சைக் குழுக்களிலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற மற்றும் பட்டியலில் தெரிவான 13 உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டனர்.


ஆன்மீக அதிதிகளாக மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிசன் சுவாமி பிரபு பிரேமானந்தாஜி மகராஜ்,மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியான் தேவாலய பிரதம குரு அருட்தந்தை தி.லோரன்ஸ், கோட்டைமுனை யூசூபியா பள்ளி வாசல் பிரதம இமாம் .ஜே.எம். இலியாஸ் மௌலவி  ஆகியோரும்

மாநகர முதல்வர் தி.சரவணபவன் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் மாநகர ஆணையாளர் எஸ். சித்திரவேல், கொழும்பு விஸ்வகர்ம சங்கத்தின் தலைவர் எஸ்.செல்வரட்ணம்; பண்டாரவளை விஸ்வகர்ம நல உரிமைச் சங்கத்தின் தலைவர் . வரதராஜா, சட்டத்தரணி கே.துரைராசசிங்கம், வைத்தியக் கலாநிதி எஸ். அன்புதாசன், சுகாதார வைத்திய அதிகாரி எஸ். சண்முகநாதன், சொர்ணம் குழுமங்களின் முகாமைத்துவப் பணிப்பாளர் முத்துப்பிள்ளை விஸ்வநாதன் மற்றும் ஓய்வுபெற்ற கணக்காளர் பெ.முத்துலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.