யானைகளின் அட்டகாசம் ஆனைகட்டியவெளி கிராமத்தில் யானை தாக்கியதில் இருவர் படுகாயம்


(மண்டூர் ஷமி)
போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆனைகட்டியவெளி கிராத்தில் நேற்று நள்ளிரவு வேளையில் வீடு ஒன்றுக்குள் உட்புகுந்த யானை அங்கிருந்தவர்களை தாக்கியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவம் பற்றி தெரியவருவதாவது
நேற்று நள்ளிரவு வேளையில் வீட்டு வளாகத்தினுள் உட்புகுந்த யானை அங்கு உறங்கிக்கொண்டிருந்த நடராஜா (58) மாரிமுத்து (72) ஆகிய இருவரையும் தாக்கிவிட்டு சென்றுள்ளது. அதேவேளை அருகிலுள்ள நாமகள் வித்தியாலய சுற்றுமதிலையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது
சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் மண்டூர் பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கல்முனை ஆதாரவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அவசரசிகிச்சைப்பிரிவில் சிகிச்சைபெற்று வருகின்றனர்
கடந்த சிலதினங்களுக்கு முன்னரும் இப்பகுதியில் வீடுகளை யானை சேதப்படுத்தி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து காட்டு யானைகளின் அச்சுறுத்தல் தமது கிராமங்களில் நிலவுவதால் கிராமமக்களின் பாதுகாப்புக்கு எந்த அதிகாரிகளோ அரசியல்வாதிகளோ நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தமக்கு மிகவேதனையளிப்பதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.