ஐயன்கேணி தமிழ் மகா வித்தியாலயத்தின் முப்பெரும் விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது


(செங்கலடி நிருபர் சுபா)
மட்/ஐயன்கேணி தமிழ் வித்தியாலயத்தின முப்பெரும் விழா(ஆசிரியர் தின விழா, முதியோர் தின விழா, பரிசளிப்பு வழா) 08.10.2018 பாடசாலையின் முதல்வர் திரு.மா.மனோகரன் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கலந்துகொண்டிருந்ததுடன் சிறப்பு அதிதிகளாக பிரதேசசபை உறுப்பினர்.வி.ஜெய்கணேஸ், எம்.ஜே மெகா எலக்ரோணிக் உரிமையாளர் எம்.ஜெஸ்ரிராஜ், மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், முதியோர்கள், பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். 
விருந்தினர் அழைப்புடன் ஆரம்பமான இவ் விழாவில் முறையே மங்கள விளக்கேற்றல், இறை வணக்கம், வரவேற்பு நடனம் என்பவற்றை தொடர்ந்து கௌரவிப்பு மற்றும் அதிதிகள் உரையும்  இடம்பெற்றது.
முதியோர்கள் சிறப்பாக கௌரவிக்கப்பட்டதுடன் ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர் மற்றும்  பிரதேச ஊடகவியலாளர்களும் இதன்போது பாடசாலை சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டனர்.