கார்மேல் பாற்றிமா தேசிய பாடசாலை மாணவி ஒஷ்னி ஜெயுஷி வலயமட்டத்தில் முதலாம் இடம்



வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் பரீட்சையில் கல்முனை கல்விவலயத்தின் கார்மேல் பாற்றிமாதேசிய பாடசாலையில் கல்வி கற்கும்  மாணவி துஸ்சின்தரன்  ஒஷ்னிஜெயுஷி 193 புள்ளிகளைப் பெற்று வலயமட்டத்தில் முதலாம் இடம் பெற்றதுடன் மாவட்ட மட்டத்தில் 3 ஆம் இடம் பெற்று சாதனை நிலை நாட்டியுள்ளார்.

இவர் கல்முனையினைச் சேர்ந்த வேல்முருகு துஸ்சின்தரன்   திருமதி தனுசியா துஸ்சின்தரன் தம்பதியினரின் புதல்வியும் என்பது குறிப்பிடத்தக்கது.