உரியமுறையில் கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை இடம்பெறும் பரீட்சைகள் ஆணையாளர்நாயகம்


கல்விப்பொதுத்தரா தரசாதாரணதரப் பரீட்சை உரியமுறையில் இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர்நாயகம் பி.சனத்பீரிஸ் தெரிவித்துள்ளார் .    

எதிர்வரும்டி செம்பர்மாதம் 3ஆம் திகதிமுதல் 12ஆம் திகதி வரைபரீட்சைகள் இடம்பெறவுள்ளன.

மாகாண மற்றும்  வலயபணிப்பாளர்களுடன் இது தொடர்பில் இன்றுபரீட்சைகள்  திணைக்களத்தில்  விசேடகலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அதன் படி சாதாரணதரப்பரீட்சைகளுக்கான சகலநடவடிக்கைகளும் ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதாக ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார். அத்துடன் எதிர்வரும் 15ஆம்பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளுடன் இது தொடர்பில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. 

பரீட்சைக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக வழங்குவது தொடர்பில்அதன் போது விசேடகவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் பரீ;ட்சைகள் ஆணையாளர்நாயகம் தெரிவித்தார்.