நீடிக்கும் காலநிலை மாற்றத்தினால் கடற்றொழில் பாதிப்பு



(எம்.பஹ்த் ஜுனைட்)

வங்காள விரிகுடாவில் உருவாகிவரும் தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கலாம் என வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

தற்போதைய காலநிலை மாற்றத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மீனவர்களின் இயல்பு நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் பெரும்பாலானவர்கள் கடற்றொழிலை வாழ்வதாரமாக கொண்டுள்ளதுடன் பிரதான வருமானமாகவும் நம்பி வாழ்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.