பாலத்தில் இருந்து தவறிவிழுந்த இளைஞர் காணமால் போயுள்ளார்


கிண்ணியா, பாலத்தில் இருந்து தூண்டிலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் இன்று (10) பிற்பகல் 3 மணியளவில் தவறிவிழுந்து கடலில் மூ​ழ்கிய நிலையில் காணாமல்போயுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காணாமல்போயுள்ள இளைஞன், கிண்ணியா - 3, பிரதான வீதியை சேர்ந்த யாக்கூப் ஹாரி முஹீத் (18 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, தனது சக நண்பர்களுடன் விடுமுறை தினமான இன்று தூண்டிலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, தவறுதலாக விழுந்து கடலில் மூழ்கிய நிலையில், இளைஞன் காணாமல்போயுள்ளார் என, ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞரை, தேடும் பணியில் பிரதேச மக்களும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.