பழைய தண்ணீர்தாங்கிவீதி சேறும் சகதியுமாக காணப்பட்டு போக்குவரத்து செய்ய முடியாத நிலையில்



(-க. விஜயரெத்தினம்)

மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட துறைநீலாவணை கிராமம் போக்குவரத்து வசதியற்ற கிராமமாகும்.இக்கிராமத்தில் 8ம் வட்டாரத்தில் மிகவும் பழமை வாய்ந்த வீதியாக தண்ணீர்தாங்கி வீதி காணப்படுகின்றது.இவ்வீதியில் ஓய்வுபெற்ற அதிபர்கள்இஆசிரியர்கள்இசமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்இகிராமசேவையாளர்கள்இஅரச ஊழியர்கள் என புத்திஜீவிகள் உள்ள வீதியாக காணப்படுகின்றது.


இவ்வாறு புத்திஜீவிகள் உள்ள வீதியானது சுமார் 15 வருடங்களுக்கு மேலாக எதுவித புனரமைப்புமின்றி 'சேறும் சகதியுமாக' முதலையின் முதுகுபோன்று காணப்படுகின்றது.மழைகாலங்களில் பெய்யுகின்ற மழை நீரானது வீதியின் நடுவேதான் வெள்ளமாக ஓடுகின்றது.பல இடங்களில் குளமும்இ குட்டையுமாக காணப்பட்டு தண்ணீர் தேங்கி தொற்றுநோய் பரவக்கூடிய வாய்ப்புள்ளது.

இவ்வீதியில் கனரக வாகனங்கள்இமோட்டார்சைக்கிள்கள் பயணித்தால் புதையக்கூடியதாகவுள்ளது.சுமார் 1200 மீற்றர் நீளமான தண்ணீர் தாங்கி வீதியானது கரடுமுரணான வகையிலும்இபடுமோசமான நிலையிலும் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தை இயக்கும் மூளசாலிகள் வளம் நிறைந்துள்ள கிராமமாகவும்இதமிழர் போராட்டத்திற்கு பாரியதொரு பங்களிப்பு செய்த கிராமமாகவும் துறைநீலாவணை விளங்கின்றது.இவ்வீதியின் அவலநிலையை கண்டும் காணாமலும் பிரதேசத்திற்கு பொறுப்பான திணைக்கள அதிகாரிகளும்இசமூகமட்ட பிரதிநிதிகளும் உள்ளார்கள் என பொதுமக்கள்இவீதியில் பயணிப்போர் கவலை தெரிவிக்கின்றார்கள்.

எனவே இவ்வீதியின் அவலநிலையை பிரதேசசபை தவிசாளர் செயலாளர்இகளுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் போன்றோர்கள் கருத்திற்கொண்டும்இதுரித கவனம் செலுத்தி மிகவிரைவில் கொங்கிறீட் வீதியாக அல்லது தார்வீதியாக மாற்றித்தருமாறு பொதுமக்கள் கோரிக்கை முன்வைக்கின்றார்கள்