தீர்ப்பு வெளியாகியது !நான்கரை வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது




ஜனாதிபதியால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வௌியிடப்பட்ட வர்த்தமானியை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வௌியாகியுள்ளது.

நான்கரை வருடங்களுக்கு முன்னதாக பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

அவ்வாறு கலைப்பதாக இருந்தால் பெரும்பான்மை இருக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், பாராளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானியை ஜனாதிபதி வௌியிட்டமை அடிப்படை உரிமை மீறல் எனவும் அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பிரதம நீதியரசர் தலைமையிலான 7 நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.