புதன்கிழமைக்குள் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் ! பிரதமராக யாரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி முடிவுகளை எடுப்பார்

புதிய அரசாங்கமொன்று எதிர்வரும் புதன்கிழமைக்குள் அமைக்கப்படுமெனவும், அமைச்சரவை சத்தியப்பிரமாண நிகழ்வும் இடம்பெறும் எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுபினர்களுடனான கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் இரண்டு தினங்களில் பிரதமராக யாரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி முடிவுகளை எடுப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இருந்தபோதிலும், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை அமைக்கும் பட்சத்தில், அரசாங்கத்தின் பதவிநிலை​களை வகிக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் தயாராக இல்லை என்ற கருத்தும் தெரிவிக்கப்படுகிறது.