மட்டக்களப்பு நகர் பிரபல பாடசாலைகளின் லண்டனில் உள்ள பழைய மாணவர்களினால் நடாத்தப்பட்ட கிறிஸ்மஸ் நிகழ்வு

( நித்தி -UK  )
 மட்டக்களப்பின் பிரபல பாடசாலைகளான புனித மிக்கல் கல்லூரி , மெதடிஸ்த மத்திய கல்லூரி , வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை , புனித சிசிலியா பெண்கள் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் லண்டனில் உள்ள பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த சனிக்கிழமை  லண்டனில் இடம்பெற்றது .

இந் நிகழ்வில் லண்டனுக்கு வருகை தந்துள்ள மட்டக்களப்பை சேர்ந்த சிவபிரகாசம் ரெட்ணகுமார் ஆசிரியர் அவர்களுக்கு கௌரவிப்பும் நடைபெற்றது
அத்துடன் பல்வேறு கலை  நிகழ்வுகளும் இடம்பெற்றது.