கல்முனை இளைஞர் சேனையின் பொங்கல் விழா 2019



(-கிஷோ-)

கல்முனை தமிழ் இளைஞர் சேனையின் பொங்கல் விழா எதிர்வரும் தைப்பொங்கல் (15) அன்று கல்முனை பழைய தனியார் பேருந்து நிலையம் வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும், மட்டு,அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரும் கலந்து சிறப்பிக்க உள்ளதுடன்,

விஷேட அதிதிகளாக மேலதிக அரசாங்க அதிபரும், கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகரும், களுவாஞ்சிக்குடி வைத்திய அத்தியட்சகரும் கலந்து கொள்ள உள்ளதுடன்,

கெளரவ அதிதிகளாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளரும், கல்முனை தமிழ் பிரதேச செயலாரும், கடற்படை கட்டளை தளபதியும், இராணுவ கட்டளை தளபதியும் (விஜயபாகுபடையனி) அத்துடன் மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தரும் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிகழ்வுகள் கலை கலாச்சார நிகழ்வுகளுடன் காலை 9 மணிக்கு ஆரம்பமாகும்.

கடந்த ஆண்டும் இளைஞர் சேனை அமைப்பினரால் பொங்கல் விழா மிகச்சிறப்பாக நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.