சுதந்திர கட்சியின் புதிய பொதுச் செயலாளராக கடமைகளைப் பொறுப்பேற்றார் தயாசிறி ஜயசேகர





ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (வியாழக்கிழமை) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

கொழும்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் மகா சங்கத்தினரின் பிரித் பாராயணத்துடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில், சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றதுடன், புதிய பொதுச்செயலாளரருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

தயாசிறி ஜயசேகரவின் நியமனக் கடிதத்தை இதன்போது ஜனாதிபதி வழங்கிவைத்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க, மஹிந்த சமரசிங்க, திலங்க சுமதிபால, லசந்த அழகியவன்ன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாச உள்ளிட்ட உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட செயற்பாட்டாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.