வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு


(சா.நடனசபேசன்)
சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் தரம் -1  மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எஸ்.பாலசிங்கன் தலைமையில் இன்று ; நடைபெற்றது.
இந்நிகழ்வில் நாவிதன்வெளிக்கோட்டக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து சம்மாந்துறை கல்விவலயத்தின் ஆசிரியர் வளநிலையத்தின் முகாமையாளர் கி.செல்வராசா உட்பட பலர் கலந்துசிறப்பித்தனர்.