பொத்துவில் பிரதேசத்திலுள்ள விவசாயிகள் மற்றும் விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு.




(அகமட் எஸ். முகைடீன்)

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் பொத்துவில் பிரதேசத்திலுள்ள விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்களும் விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கிவைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (11) பொத்துவில் பிரதேச செயலாளர் ஏ.எம். அஹமட் நசீல் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாஸித், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்களான முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.எம். மர்சூக், எம்.எச். கியாஸ், ஏ.எல். ஜுனைதா உம்மா, எஸ்.ரி. சபூறா உம்மா, எஸ். பகூர்டீன் மற்றும் பொத்துவில் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல். ஜனூஸ், சட்டத்தரணி எம்.சி. பைசல், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொத்துவில் இளைஞர் அமைப்பாளர் பி. பசூர்கான், விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள், பிரதேசவாசிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பொத்துவில் பிரதேச சபை முன்னாள் தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான மர்சூக்கின் வேண்டுகோளுக்கமைவாக தெரிவு செய்யப்பட்ட விவசாயிகள் மற்றும் விளையாட்டு கழகங்களுக்கு விவசாய மற்றும் விளையாட்டு உபகரணங்கள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.