கோட்டைமுனை ஸ்ரீ அரசடிப் பிள்ளையார் ஆலயத்திருவிழாவில் சாம்பசிவம் சிவாச்சாரியாருக்குக் கௌரவம்


(சிவம்)
கோட்டைமுனை ஸ்ரீ அரசடிப் பிள்ளையார் ஆலய ஏழாம் நாள் திருவிழாவான இன்று வெள்ளிக்கிழமை (18) கலாபூசண விருதுக்குத் தெரிவான சாம்பசிவம் சிவாச்சாரியாருக்குக் கௌரவமளிக்கப்பட்டது.

அடியார்களிடையே ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு ஆலயத் திருவிழாக் காலங்களில் சிவஸ்ரீ எஸ். சாம்பசிவம் சிவாச்சாரியாரினால் ஆன்மீகச் சொற்பொழிவு மற்றும் கதாப்பிரசங்கங்கள் நடாத்தி வருகின்றார்.

குறித்த பிரசங்கங்களிலிருந்து அடியார்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு சரியான பதில்களைச்; சொல்பவர்களுக்கு ஊக்குவிப்புப் பரிசுப் பொருட்கள் சிவபாதசுந்தரம் சகோதரர்களாலும் மற்றும் அமரர் கே.கே. சண்முகம் குடும்பத்தினராலும் வழங்கப்படுகின்றன.

இலங்கை அரசினால் ஆன்மீக கலை கலாசாரம் மற்றும் ஊடகத் துறைகளில் பங்களிப்புச் செய்தவர்களைத் தெரிவு செய்து வழங்கப்படும் தேசிய காலாபூசண விருது -2018 கொழும்பு தாமரைத் தடாகத்தில் 29.01.2019 செவ்வாய்க்கிழமை பி.ப. 4.00 மணிக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.